sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மொபைல் போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி

/

மொபைல் போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி

மொபைல் போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி

மொபைல் போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி


ADDED : மே 12, 2024 12:44 PM

Google News

ADDED : மே 12, 2024 12:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: வெண்ணந்துாரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் குமார், 24. கடந்த மார்ச், 16ல் அடிதடி வழக்கில் குமாரை கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த, 1ல் ஜாமினில் வெளியே வந்த குமார் மற்றும் இவரது அக்காள் கணவர் ஆகிய இருவரும் சேர்ந்து, அப்பகுதியை சேர்ந்த, 2 பேரை கத்தியை காட்டி மிரட்டியதாக போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து, விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் சுகவனம், குமாரின் டூவீலரை பறிமுதல் செய்து மிரட்டியதாக மன உளைச்சலில் இருந்த குமார், இரண்டு நாட்களாக வீட்டுக்கு செல்லாமல் வெளியில் தங்கி உள்ளார். இதற்கிடையே, நேற்று காலை, 8:00 மணிக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க குமார் வந்தார்.

அப்போது, கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள மொபைல் போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள், நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள், குமாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மொபைல் போன் டவரில் இருந்து கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us