/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருச்செங்கோட்டில் வழிப்பறி ஒருவர் கைது; 2 பேருக்கு வலை
/
திருச்செங்கோட்டில் வழிப்பறி ஒருவர் கைது; 2 பேருக்கு வலை
திருச்செங்கோட்டில் வழிப்பறி ஒருவர் கைது; 2 பேருக்கு வலை
திருச்செங்கோட்டில் வழிப்பறி ஒருவர் கைது; 2 பேருக்கு வலை
ADDED : டிச 27, 2025 05:33 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, பாரதி நகரை சேர்ந்தவர் கார்த்தி, 27; தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் ஏஜன்ட். இவரும், உடன் பணிபுரியும் பூவரசன், 24, என்பவரும் சேர்ந்து, கொசவம்பாளையம் பகு-தியில் கடன் கேட்டவரின் வீட்டுக்கு ஆய்வுக்கு சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் யாரும் இல்-லாததால், ஒரு மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது டூவீலரில் அங்கு வந்த மூவர், கார்த்தி, பூவரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 32,400 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து கார்த்தி கொடுத்த புகார்படி, திருச்-செங்கோடு டவுன் போலீசார், வழிப்பறியில் ஈடு-பட்ட செங்கோடம்பாளையத்தை சேர்ந்த சரத்-குமார், 30, சண்முகபுரத்தை சேர்ந்த பார்த்திபன், 40, வெள்ளியங்கிரி, 40, ஆகிய, மூன்று பேரை தேடி சென்றனர்.
அப்போது, வீட்டில் பதுங்கி இருந்த சரத்குமாரை பிடித்த போலீசார், தலைமறைவாக உள்ள, இரு-வரையும் தேடி வருகின்றனர். சரத்குமார் மீது மொளசி போலீஸ் ஸ்டேஷனில், ஒரு கொலை வழக்கு, திருச்செங்கோடு நகர போலீஸ் ஸ்டேஷனில், இரண்டு வழிப்பறி வழக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

