ADDED : நவ 19, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைமறைவு குற்றவாளி கைது
பள்ளிப்பாளையம், நவ. 19-
பள்ளிப்பாளையம் அருகே, வசந்த நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 26. இவர் மீது கடந்த, 2021ல் கொலை முயற்சி வழக்குப்பதிந்து, போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்த மணிகண்டன், பின் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கடந்த, 3 ஆண்டாக தலைமறைவாக இருந்தார். நேற்று மாலை, வசந்தநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக, பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்த, வசந்த நகர் பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு பதுங்கி இருந்த மணிகண்டனை கைது செய்தனர். இவர் மீது ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனிலும் கொலை முயற்சி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.