sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சேலம் வழியாக செல்லும் மூன்று ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

/

சேலம் வழியாக செல்லும் மூன்று ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

சேலம் வழியாக செல்லும் மூன்று ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

சேலம் வழியாக செல்லும் மூன்று ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு


ADDED : ஜூலை 18, 2025 02:17 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் வழியாக செல்லும், மூன்று ரயில்களில் பயணிகள் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியட்டுள்ள அறிக்கை: நாகர்கோவிலில் இருந்து கரூர், நாமக்கல், சேலம் வழியாக கச்சகுடா செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் நாளை முதல் கூடுதலாக படுக்கை வசதியுடன் கூடிய, ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் வரும் கச்சகுடா-நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜூலை, 20 முதல், படுக்கை வசதியுடன் கூடிய ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.

இதே போல் சென்னை-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜூலை 21 முதல், கூடுதலாக ஒரு ஏ.சி. சேர் கார் பெட்டி இணைக்கப்படுகிறது. மறுமார்க்க ரயிலிலும், ஒரு ஏ.சி. சேர் கார் பெட்டி இணைக்கப்படுகிறது.

இதே போல் கே.எஸ்.ஆர்., பெங்களூரு-கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜூலை 21 முதல் கூடுதலாக ஒரு டபுள் டெக்கர் ஏ.சி. கோச் இணைக்கப்படுகிறது. மறு மார்க்க ரயிலிலும் ஒரு டபுள் டெக்கர் ஏ.சி. கோச் இணைக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us