sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தென்னையில் வெள்ளை சுருள் ஈ தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் கள ஆய்வு

/

தென்னையில் வெள்ளை சுருள் ஈ தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் கள ஆய்வு

தென்னையில் வெள்ளை சுருள் ஈ தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் கள ஆய்வு

தென்னையில் வெள்ளை சுருள் ஈ தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் கள ஆய்வு


ADDED : மார் 29, 2025 07:23 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த கார்கூடல்பட்டி கிராமத்தில், தென்னை பயிரில் பரவலாக வெள்ளை சுருள் ஈ தாக்குதல் காணப்படுகிறது.

இதுகுறித்து, விவசாயிகள் அடிக்கடி கூறிவந்ததை அடுத்து நாமகிரிப்-பேட்டை வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், வெள்ளை சுருள் ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்து, நேரடியாக விவசாய வயல்களுக்கு சென்று செயல் விளக்கம் செய்து காட்டினர்.

மகசூல் குறைவு

இதில், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய ஓய்வு பெற்ற விஞ்ஞானி ராஜமாணிக்கம், தென்னை ரகங்கள், தென்னையில் ஒருங்கிணைந்த முறையில் பூச்சி கட்டுப்பாடு குறித்து விளக்கம-ளித்தார். குறிப்பாக, தென்னை பயிரை தாக்கிய வெள்ளை சுருள் ஈ பூச்சியின் தாக்குதல் அறிகுறியாக, தென்னை ஓலைகளில் வெள்ளை படர்ந்தது போல் தோன்றி, கருப்பு நிறமாக மாறி இலைகளில் பசை போன்று ஒட்டிக்கொள்வதால் மகசூல் குறைவு ஏற்படும்.இளம் புழுக்கள்மேலும், மரத்தில், ஆறு அடி உயரத்தில் ஏக்கருக்கு, எட்டு இடங்-களில் மஞ்சள் ஒட்டு பொறியில் விளக்கெண்ணெய் தடவி மரத்தை சுற்றி கட்டி வைத்து அந்து பூச்சிகளை கட்டுப்படுத்-தலாம். பூச்சிகளின் இனப்பெருக்கம் தடைசெய்யப்பட்டு பாதிப்பு கட்டுப்படுத்தப்படும். முட்டை ஒட்டுண்ணியான, என்காசியா, கிரைசோபெர்ளா என்ற முட்டை ஒட்டுண்ணிகளை ஒரு ஹெக்-டேருக்கு, 1,000 முட்டைகள் என்றளவில் தென்னை மட்டையில் கட்டி விட வேண்டும். இதன் மூலம் வெள்ளை சுருள் ஈ பூச்சி-களின் முட்டைகளை உண்ணுதல் மற்றும் இளம் புழுக்களை தின்றும் வெள்ளை சுருள் ஈ தாக்குதல் பெருமளவில் கட்டுப்படுத்-தப்படும் என்றார்.தோட்டக்கலை உதவி இயக்குனர் வித்யபாரதி, 'தோட்டக்கலைத்-துறை மூலம் தென்னை பயிரில் பல்வேறு திட்டங்கள் செயல்ப-டுத்தப்படுகிறது' என கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, துணை தோட்டக்கலை அலுவலர் வடிவேல் முருகன், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் கோபால், வெற்றிவேல், சொக்கலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us