/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பிறந்தநாள்: சிறப்பாக கொண்டாட முடிவு
/
அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பிறந்தநாள்: சிறப்பாக கொண்டாட முடிவு
அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பிறந்தநாள்: சிறப்பாக கொண்டாட முடிவு
அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பிறந்தநாள்: சிறப்பாக கொண்டாட முடிவு
ADDED : மே 05, 2025 03:00 AM
நாமக்கல்: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பிறந்த நாளை சிறப்-பாக கொண்டாடுவது என, நாமக்கல் மாநகர நிர்வாகிகள் கூட்-டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாநகர அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், மாநகர செய-லாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பாஸ்கர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், வரும், 12ல் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான இ.பி.எஸ்., பிறந்த நாளை, நாமக்கல் நகரில் சிறப்பாக கொண்டாடுவது என, தீர்மானம் நிறை-வேற்றப்பட்டது.
மேலும், மாநகர செயலாளர் பாஸ்கர் தலைமையில், பெண்கள் பால்குடம் எடுத்து, நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு, மாநகர தகவல் தொழில் நுட்ப அணி மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை சார்பில், அன்னதானம் வழங்க முடிவு செய்-யப்பட்டது. வரும், 12ல், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க தேரோட்டம் நடத்துவது உள்-பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், நாமக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் சேகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா செல்வகுமார், புதுச்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாத், மோகனுார் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மோகனுார் நகர செயலாளர் ராஜ
வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.