sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முன்னாள் அமைச்சரின் பேனர் கிழிப்பு அ.தி.மு.க.,வினர் போலீசில் புகார்

/

முன்னாள் அமைச்சரின் பேனர் கிழிப்பு அ.தி.மு.க.,வினர் போலீசில் புகார்

முன்னாள் அமைச்சரின் பேனர் கிழிப்பு அ.தி.மு.க.,வினர் போலீசில் புகார்

முன்னாள் அமைச்சரின் பேனர் கிழிப்பு அ.தி.மு.க.,வினர் போலீசில் புகார்


ADDED : ஜூலை 12, 2025 01:42 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.பாளையம் :பள்ளிப்பாளையத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மர்ம நபர்கள் கிழித்ததால், அக்கட்சியினர் போலீசில் புகாரளித்துள்ளனர்.

பள்ளிப்பாளையம் நகராட்சியில் டி.வி.எஸ்., மேடு, சந்தைப்பேட்டை, தான்தோன்றி முருகன் கோவில் பகுதி, தில்லை நகர் ஆகிய இடங்களில், அ.தி.மு.க., சார்பில் திட்டப்பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி, பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு, அ.தி.மு.க., சார்பில் நான்கு இடங்களில், முன்னாள் அமைச்சர் தங்கமணியை வரவேற்று பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர்.

இதில், சந்தைப்பேட்டை, தான்தோன்றி முருகன் கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் தங்கமணியின் படத்தின் மீதே கிழித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர், நேற்று மதியம் பள்ளிப்பாளையம் நகர அ.தி.மு.க., செயலாளர் வெள்ளிங்கிரி தலைமையில், பள்ளிப்பாளையம் போலீசில் புகாரளித்தனர். புகார்படி, சந்தேக நபர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us