sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேர்தல் தொடர்பாக பதிவான 338 வழக்குகளும் முடித்து வைப்பு

/

தேர்தல் தொடர்பாக பதிவான 338 வழக்குகளும் முடித்து வைப்பு

தேர்தல் தொடர்பாக பதிவான 338 வழக்குகளும் முடித்து வைப்பு

தேர்தல் தொடர்பாக பதிவான 338 வழக்குகளும் முடித்து வைப்பு


ADDED : ஏப் 21, 2024 10:42 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 10:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: தேர்தல் தொடர்பாக, 'சி-விஜில்', டோல் பிரீ எண்ணில் பதிவான, 338 வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கவும், அதன் மீது தீர்வு காணவும் மாவட்ட அளவில், 'கன்ட்ரோல் ரூம்' அமைக்கப்பட்டது. 'சி-விஜில்' என்ற மொபைல் அப்ளிகேஷன் மற்றும் டோல் பிரீ எண் மூலம் வரும் புகார்களை, 12 மணி நேரத்திற்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்குள், நேற்று முன்தினம் வரை, 'சி-விஜில்' ஆப்பில், 21, தொலைபேசியில், 12 என, 33 புகார்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாமக்கல்லில், 70, பரமத்தி வேலுாரில், 39, ராசிபுரத்தில், 110, சேந்தமங்கலம், 41, திருச்செங்கோட்டில், 44 என மொத்தம், 338 புகார்கள் பெறப்பட்டன. இவை அனைத்தும், நேற்று முன்தினம் மாலைக்குள் தீர்த்து வைக்கப்பட்டன.

மாவட்டத்தில், ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தான் அதிகபட்ச புகார்கள் பதிவாகியிருந்தன. சி-விஜிலில், 79, மொபைல் போனில், 31, என, மொத்தம், 110 புகார்கள் வந்தன. மொத்தமாக, சி-விஜில் மூலம், 230 புகார்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us