/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வக்ப் வாரிய சட்ட திருத்தம்: நா.த.க., ஆர்ப்பாட்டம்
/
வக்ப் வாரிய சட்ட திருத்தம்: நா.த.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 14, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: மத்திய அரசு, வக்ப் வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நா.த.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி, நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் தலைமை வகித்தார்.
மண்டல செயலாளர்கள் ஆனந்த், ஹரிகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சுடலைராஜன், கொள்கை பரப்பு செயலாளர் பார்த்திபன் ஆகியோர் பங்கேற்று, 'வக்ப் வாரிய சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி' கோஷம் எழுப்பினர்.

