sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : அக் 27, 2024 01:19 AM

Google News

ADDED : அக் 27, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், அக். 27-

தேசாய் அறக்கட்டளை, எஸ்.பி.எஸ்., அறக்கட்டளை, தொன்போஸ்கோ முன்னாள் மாணவர்கள், சலேசியா அட்சான் உறுப்பினர்கள் சார்பில், 'பால் ஹெல்த் மேளா', நாமக்கல் அடுத்து என்.புதுப்பட்டியில் உள்ள தொன்போஸ்கோ அன்பு இல்லத்தில் நடந்தது.

தொன்போஸ்கோ அன்பு இல்ல இயக்குனர் பரத் ஜெயராஜ் தலைமை வகித்தார். என்.புதுப்பட்டி பஞ்., தலைவர் கவிதா, சஹானா பவுல்ட்ரி பார்சூன் நிறுவனர்கள் பிரான்சிஸ், ஜெப்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மொபைல் போன் பயன்படுத்துவதால், குழந்தைகளுக்கு மனநலம் பாதிப்பு, கவன சிதறல், தனிமைப்படுத்திக்கொள்ளுதல், அடிமையாதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். அவற்றில் இருந்து விடுபடவும், மொபைல் போன் படுத்துவதில் இருந்து விலக்கி, விளையாட்டு மூலம் கவனத்தை திசை திருப்பி, நல்வழிப்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆடல், பாடல் மூலம் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. அதில், குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரங்கேற்றிய நாடகம், தத்ரூபமாக இருந்தது, பார்வையாளர்களை கவர்ந்தது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், என்.புதுப்பட்டி, எருமப்பட்டி, பீமநாயக்கன்பட்டி, வீரிப்பாளையம், கணபதிநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us