sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கரும்பில் கரிப்பூட்டை நோய் அறிகுறி கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு யோசனை

/

கரும்பில் கரிப்பூட்டை நோய் அறிகுறி கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு யோசனை

கரும்பில் கரிப்பூட்டை நோய் அறிகுறி கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு யோசனை

கரும்பில் கரிப்பூட்டை நோய் அறிகுறி கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு யோசனை


ADDED : ஜன 29, 2024 11:27 AM

Google News

ADDED : ஜன 29, 2024 11:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: கரும்பு பயிரில் கரிப்பூட்டை நோய் அறிகுறிகள் குறித்தும், அதை கட்டுப்படுத்தும் முறை குறித்தும், ராசிபுரம் வேளாண்துறையினர், விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து, வெளியிட்ட அறிக்கை: கரிப்பூட்டை நோய் பாதித்த கரும்புகளை எளிதில் கண்டுபிடிக்கலாம். வளரும் கரும்பின் வளர்ச்சி பகுதியில் இருந்து சாட்டை வடிவம், 25 முதல், 150 செ.மீ., வரை காணப்படும். கருமை நிற பூஞ்சாண துகள்களை கொண்ட ஒளி ஊடுருவ கூடிய வெள்ளி போன்ற ஜவ்வினால் இந்த சாட்டை சூழப்பட்டிருக்கும்.

ஆரம்பத்தில் கணுவிடைப்பகுதி நீண்டும், பின் கரும்பின் நீளமும் குன்றிவிடும். கட்டை கரும்பில் பக்க மொட்டுகள் அபரிமிதமாக முளைவிட ஆரம்பிக்கும். அதன் இலைகள் குறுகலான செங்குத்தான தோகையாக உருவாகும்.

இதை கட்டுப்படுத்த துவரை பயிரை, கரும்பு வரிசைகளுக்கு இடையே பயிரிடுவதால் இரண்டாம் நிலை பரவல் குறையும். விதை கரணை, 50 செல்ஷியஸ் வெப்பத்தில், ஒரு மணி நேரம் அல்லது சுடுநீரில், 50 செல்ஷியஸ் வெப்பத்தில் அரை மணிநேரம் அல்லது, 52 செல்ஷியஸ் வெப்பத்தில், 18 நிமிடங்களுக்கு நேர்த்தி செய்ய வேண்டும்.

கார்பன்டாசிம், 50 சதவீதம் யூரியா கரைசலில், 15 நிமிடம் கரணைகளை நேர்த்தி செய்ய வேண்டும். கரிப்பூட்டை நோய் தாக்கி, தாரை சாட்டையில் இருந்து பூசண வித்துக்கள் காற்றில் பறக்காமல் இருக்கும்படி ஒரு கோணி அல்லது பாலித்தீன் பை கொண்டு நுழைத்து கரிச்சாட்டையை மட்டும் ஒடித்து பின் அத்துாரையும் பெயர்த்து சேர்த்து எரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us