/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆவணி மாத அமாவாசை தங்க கவசத்தில் ஆஞ்சநேயர்
/
ஆவணி மாத அமாவாசை தங்க கவசத்தில் ஆஞ்சநேயர்
ADDED : ஆக 23, 2025 01:30 AM
நாமக்கல், ஆவணி மாத அமாவாசையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், தமிழ் மாத முதல் ஞாயிறு, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்பு, ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, ஏகாதசி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும்.
அதன்படி, ஆவணி அமாவாசையான நேற்று, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின், தங்கக்கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

