/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆஞ்சநேயர் கோவில் தீ மிதி விழா பந்தல் சேர்வையுடன் துவக்கம்
/
ஆஞ்சநேயர் கோவில் தீ மிதி விழா பந்தல் சேர்வையுடன் துவக்கம்
ஆஞ்சநேயர் கோவில் தீ மிதி விழா பந்தல் சேர்வையுடன் துவக்கம்
ஆஞ்சநேயர் கோவில் தீ மிதி விழா பந்தல் சேர்வையுடன் துவக்கம்
ADDED : ஏப் 07, 2024 03:07 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா கணவாயில், வரலாற்று சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் கடைசி வாரம் தீமிதி விழா நடப்பது வழக்கம். சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்வர். இந்தாண்டு விழா, நேற்று பந்தல் சேர்வையுடன் தொடங்கியது. நாமகிரிப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தலில் ஆஞ்சநேயர் உற்சவர் சிலை, நேற்று மதியம் கொண்டு வந்து அமர்த்தப்பட்டது.
தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று காலை, கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆஞ்சநேயர் நாமகிரிப்பேட்டையில் இருந்து ஊர்வலமாக மெட்டாலா கொண்டு செல்லப்படுகிறார். ஆத்துார் பிரதான சாலை வழியாக இந்த ஊர்வலம் நடக்கவுள்ளது. மதியம் சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. மாலையில், கன்னிமார் ஊற்றில் இருந்து சக்தி அழைக்கும் நிகழ்ச்சியும், பக்தர்கள் தீ மிதி விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஹிந்து அறநிலையத்துறையுடன் இணைந்து விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

