sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பொருளாதார மேம்பாட்டு கழக கடன் திட்டத்தில் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சம் உயர்வு

/

பொருளாதார மேம்பாட்டு கழக கடன் திட்டத்தில் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சம் உயர்வு

பொருளாதார மேம்பாட்டு கழக கடன் திட்டத்தில் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சம் உயர்வு

பொருளாதார மேம்பாட்டு கழக கடன் திட்டத்தில் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சம் உயர்வு


ADDED : நவ 14, 2024 07:21 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'தமிழக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களில், திட்டம், 1ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம், மூன்று லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக சிறுபான்மை-யினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம், தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களான சிறு தொழில் கடன், கைவினை கலை-ஞர்களுக்கு கடன், கல்விக்கடன்

ஆகிய திட்டங்கள் செயல்படுத்-தப்படுகின்றன. மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து வகை கடன்க-ளுக்கும், திட்டம், 1ன் கீழ் பயன்பெற ஆண்டு வருமானம், நகர்ப்-புறத்திற்கு, 1.20 லட்சம் ரூபாய்க்கு மிகாமலும், கிராமப்புறத்திற்கு, 98,000

ரூபாய்-க்கு மிகாமலும் இருக்க வேண்டும் என நடைமு-றையில் இருந்தது.இந்த வருமான உச்சவரம்பு, கிராமம் மற்றும் நகர்ப்புறம் ஆகிய இரண்டிலும், தற்போது, மூன்று லட்சம் ரூபாயாக, கடந்த, அக்., 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தகவல்களுக்கு கலெக்டர் அலுவலக, இரண்டாம்

தளத்தில், அறை எண், 28ல், அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்-மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்-ளலாம். நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லா-மிய,

சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய அனைத்து சிறு-பான்மையின மக்களும், இந்த வருமான உச்ச வரம்பு உயர்வை பயன்படுத்தி விண்ணப்பித்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us