/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெயில் தொடங்கியதால் அப்பளம் உற்பத்தி சுறுசுறுப்பு
/
வெயில் தொடங்கியதால் அப்பளம் உற்பத்தி சுறுசுறுப்பு
ADDED : டிச 06, 2024 07:36 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை பகுதியில், வெயில் மீண்டும் தொடங்கியதால் அப்பளம் உற்பத்தி சுறுசுறுப்பு அடைந்துள்ளது.
ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், கடந்த இரண்டு வாரமாக மழை பெய்ததால் பல்வேறு பணிகள் முடங்கியது. நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டி பகுதிகளில் மரவள்ளி கிழங்கு மாவில் அப்பளம் உற்பத்தி செய்வது பிரபலம். இப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் குடிசைத்தொழிலாக அப்பளம் உற்பத்தியை செய்து வருகின்றனர். வேகவைத்து, வெயிலில் நன்றாக காய வைத்துதான் அப்பளம் தயாரிக்கப்படுகிறது.
தொடர் மழை காரணமாக நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டி பகுதியில் அப்பளம் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக வெயில் சுளிர் என அடிப்பதால் மீண்டும் உற்பத்தி தொடங்கியுள்ளது. அதேபோல், தொடர் மழையால் ராசிபுரம் சுற்று வட்டா பகுதியில் உள்ள வேளாண் நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், களை எடுப்பது, உழவு, பூச்சி மருந்து அடிப்பது உள்ளிட்ட பணிகளை செய்ய முடியாமல் தவித்து வந்தனர். தற்போது வெயில் அடிக்க தொடங்கியதால், தேங்கியிருந்த மழைநீரும் வறண்டுவிட்டது.
நேற்று ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள், உழவு, களை எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். முக்கியமாக மானாவாரி விவசாயிகள் விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.