/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டாக்ஸி டிரைவர்கள் இடையே வாக்குவாதம்
/
டாக்ஸி டிரைவர்கள் இடையே வாக்குவாதம்
ADDED : ஜூலை 11, 2024 12:41 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் கால் டாக்ஸியில் ஆட்களை ஏற்றுவ-தற்கு, உள்ளூர் வாடகை டாக்ஸி டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்-ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.இதுகுறித்து, பள்ளிப்பாளையம் வாடகை கார் டிரைவர் சரவணன் கூறியதாவது: கால் டாக்ஸி டிரைவர்கள், பள்ளிப்பாளையம் பகு-திக்கு வந்து ஆட்களை ஏற்றிச்செல்கின்றனர்.
இதனால் பள்ளிப்பா-ளையம் சுற்று வட்டாரத்தில் வாடகை கார் வைத்திருப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கால் டாக்ஸி டிரைவர்கள், பள்ளிப்பா-ளையம் பகுதியில் ஆட்களை ஏற்றக்கூடாது என, ஏற்கனவே டிரைவர் சங்கம் சார்பில், போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்-நிலையில், நேற்றுமுன்தினம் மாலை, கால் டாக்ஸி ஒன்று, பள்-ளிப்பாளையம் பகுதிக்கு வந்து ஆட்களை ஏற்றிச் சென்றுள்ளது. இதையறிந்த நாங்கள் ஆட்களை ஏற்றக்கூடாது என, எதிர்ப்பு தெரிவித்தோம். இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசிலும் புகா-ரளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.