sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை

/

வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை

வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை

வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை


ADDED : டிச 02, 2024 02:57 AM

Google News

ADDED : டிச 02, 2024 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நெற்பயிர்களில் வேர் அழுகல், நாற்றழுகல், வாடல் நோயை கட்டுப்படுத்த, நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமா அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

டிரைக்கோடெர்மா விரிடி, நோய்களை உண்டாக்கும் பூஞ்சாணங்-களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, வேருக்கு பாதுகாப்பு கவச-மாக விளங்குகிறது. இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்-தலாம். இது பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும்.

பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி ஊக்கிகளை (ஹார்மோன்கள்) உற்பத்தி செய்கிறது. மண்ணில் உள்ள மக்காத குப்பைகளை எளி-தாக, விரைவாக மட்க வைத்து உரமாக்குகின்றன. வேரின் வளர்ச்-சியை துரிதப்படுத்துகிறது. இதனால் வேரின் செயல்திறன் அதி-கரிக்கிறது. ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடியை, 10 கிராம், நீர் தெளித்து கலந்து அரைமணிநேரம் நிழலில் உலர்த்தி பின் நடவு செய்யலாம். டிரைக்கோடெர்மா விரிடி ஒரு ஏக்கருக்கு, 2 முதல், 3 கிலோவை மண்புழு உரம் அல்லது, 100 கிலோ நன்கு மக்கிய சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களுடன் கலந்து, 10 முதல்,- 15 நாட்கள் நிழலில் வைத்து பின் நிலத்தில் ஈரம் இருக்கும் பொழுது அடியுரமாக போடலாம். மேலும், டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோவை, 100 லிட்டர் நீரில் கரைத்து வேர்ப்பகுதியிலும் ஊற்றலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us