sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை

/

வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை

வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை

வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை


ADDED : டிச 03, 2024 01:26 AM

Google News

ADDED : டிச 03, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, டிச. 2-

நெற்பயிர்களில் வேர் அழுகல், நாற்றழுகல், வாடல் நோயை கட்டுப்படுத்த, நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமா அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

டிரைக்கோடெர்மா விரிடி, நோய்களை உண்டாக்கும் பூஞ்சாணங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, வேருக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இது பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும்.

பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி ஊக்கிகளை (ஹார்மோன்கள்) உற்பத்தி செய்கிறது. மண்ணில் உள்ள மக்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மட்க வைத்து உரமாக்குகின்றன. வேரின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதனால் வேரின் செயல்திறன் அதிகரிக்கிறது. ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடியை, 10 கிராம், நீர் தெளித்து கலந்து அரைமணிநேரம் நிழலில் உலர்த்தி பின் நடவு செய்யலாம். டிரைக்கோடெர்மா விரிடி ஒரு ஏக்கருக்கு, 2 முதல், 3 கிலோவை மண்புழு உரம் அல்லது, 100 கிலோ நன்கு மக்கிய சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களுடன் கலந்து, 10 முதல்,- 15 நாட்கள் நிழலில் வைத்து பின் நிலத்தில் ஈரம் இருக்கும் பொழுது அடியுரமாக போடலாம். மேலும், டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோவை, 100 லிட்டர் நீரில் கரைத்து வேர்ப்பகுதியிலும் ஊற்றலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us