/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குறைதீர் கூட்டத்தில் 5 மா.திறனாளிக்கு ரூ.2.74 லட்சத்தில் உதவி உபகரணம்
/
குறைதீர் கூட்டத்தில் 5 மா.திறனாளிக்கு ரூ.2.74 லட்சத்தில் உதவி உபகரணம்
குறைதீர் கூட்டத்தில் 5 மா.திறனாளிக்கு ரூ.2.74 லட்சத்தில் உதவி உபகரணம்
குறைதீர் கூட்டத்தில் 5 மா.திறனாளிக்கு ரூ.2.74 லட்சத்தில் உதவி உபகரணம்
ADDED : ஏப் 29, 2025 02:11 AM
நாமக்கல்:
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு, 2.74 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 540 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஐந்து பேருக்கு, 2.74 லட்சம் ரூபாய் மதிப்பில், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், செயற்கை கால் மற்றும் ரோலேட்டர் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
ப.வேலுார் தாலுகா, கூடச்சேரி கிராமத்தை சேர்ந்த கவுரிசங்கர், திருமணிமுத்தாற்றில் மூழ்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு, முதல்வர் பொது நிவாரண நிதி உதவியாக, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், குமாரபாளையம் தாலுகா, ஆயக்காட்டூரை சேர்ந்த தனபால், வன்கொடுமையால் இறந்ததையடுத்து, அவரது சகோதரர் தினேஷ்குமாருக்கு, நாமக்கல் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில், சமையலர் பணியிடத்திற்கான பணி ஆணையை கலெக்டர் உமா வழங்கினார்.
டி.ஆர்.ஓ., சுமன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.