/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீ விபத்தை தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தீ விபத்தை தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 30, 2024 11:54 PM
குமாரபாளையம்:விபத்தில்லா
தீபாவளி கொண்டாடுவது குறித்து, குமாரபாளையம் அரசு பள்ளியில்,
தீயணைப்புத்துறையினர் செயல்முறை விளக்கமளித்தனர். அப்போது,
தீயணைப்புத்துறை அலுவலர் ஜெயச்சந்திரன் பேசியதாவது:
பட்டாசு
பற்ற வைக்கும்போது, தள்ளி நின்று பற்ற வைக்க வேண்டும்; வெடிகளை
வெடிக்கும்போது திரிகளை கிள்ளிவிட்டு வைக்க வேண்டும். மத்தாப்பு
வைக்கும்போது பாதுகாப்பாக வைக்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவது,
பாலிஸ்டர் போன்ற ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்க கூடாது. ஆறு, ஏரி,
குளங்கள், கிணறு ஆகிய நீர் நிலைகளில் ஆபத்தான நிலையில் இருக்கும் நபரை,
தீ விபத்து நடந்த இடத்தில் சிக்கிய நபரை செயல்முறை விளக்கமளித்தபடி
எளிய வழிகள் மூலம் காப்பாற்றலாம். இவ்வாறு அவர் பேசினார்.

