ADDED : பிப் 18, 2024 10:57 AM
ப.வேலுார்: ப.வேலுார் வட்டாரத்தில் வெல்லம் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் வட்டாரத்தில் பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். இவற்றை, கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கிச் சென்று, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கின்றனர். அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை, 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல மார்க்கெட்டில், சனி, புதன் கிழமைகளில் விற்பனை செய்கின்றனர்.
அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரம், 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,240 ரூபாய்க்கு விற்றது, 1,180 ரூபாய்க்கும், அச்சுவெல்லம், 1,360 ரூபாய்க்கு விற்றது, 1,260 ரூபாய்க்கும் விற்பனையானது. உருண்டை வெல்லம், 3,800, அச்சு வெல்லம், 1,600 சிப்பம் என, மொத்தம், 66 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது. வெல்லம் விலை சரிவால், கரும்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.