/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுார் தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை சரிவால் கவலை
/
ப.வேலுார் தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை சரிவால் கவலை
ப.வேலுார் தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை சரிவால் கவலை
ப.வேலுார் தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை சரிவால் கவலை
ADDED : நவ 02, 2024 01:30 AM
ப.வேலுார், நவ. 2--
ப.வேலுார் அதன் சுற்றுவட்டாரங்களான, பரமத்தி, பொத்தனுார், நன்செய் இடையாறு உள்ளிட்ட காவிரி கரையோர கிராமங்களில், 1,000 ஏக்கர் பரப்பளவில், வாழை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு, பூவன், ரஸ்தாளி, கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட வாழை ரகங்கள் பயிரிடப்படுகின்றன. அவ்வாறு பயிரிடப்படும் வாழை, ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தினசரி வாழை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு வரும் வியாபாரிகள், வாழைக்கு விலை நிர்ணயம் செய்து எடுத்து செல்வர்.
கடந்த வாரம், பூவன் வாழைத்தார், 400 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று, 10 ரூபாய் முதல் அதிகபட்சம், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், 350 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 100 ரூபாய், 300 ரூபாய்க்கு விற்ற கற்பூரவல்லி, 100 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை சரிவால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.