/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆன்மிக ஹிந்து சமய பேரவை சார்பில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா
/
ஆன்மிக ஹிந்து சமய பேரவை சார்பில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா
ஆன்மிக ஹிந்து சமய பேரவை சார்பில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா
ஆன்மிக ஹிந்து சமய பேரவை சார்பில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா
ADDED : ஜன 04, 2025 01:25 AM
நாமக்கல், ஜன. 4-
ஆன்மிக ஹிந்து சமய பேரவையின், திருப்பாவை குழு சார்பில், நாமக்கல் அரங்கநாதர் சுவாமி கோவிலில், மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதேபோல், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பக்தர்கள் தங்களது கையில் விளக்கேந்தி மலைக்கோட்டையை வளம் வந்து, சுவாமியை வழிபாடு செய்வர். 54ம் ஆண்டாக நடக்கும் ஆன்மிக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தற்போது, கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.
மூன்றாம் ஆண்டாக, நேற்று அரங்கநாதர் கோவில் படிவசால் அருகே நடந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு, அதன் தலைவர் பண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகம், துணைத்தலைவர்கள் இளங்கோவன், இன்பவள்ளி, பொருளாளர் கோபி முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் மல்லிகா, அழகம்மாள் ஆகியோர், 20 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து, டாக்டர் குழந்தைவேலு, ஆடிட்டர் வெங்கடசுப்ரமணி, ஆன்மிக ஹிந்து சமய பேரவை கவுரவ தலைவர் சோழாஸ் ஏகாம்பரம் ஆகியோர், பக்தி சொற்பொழிவாற்றினர். விழா முடிவில், கிருஷ்ணர் உபதேச புத்தகம் வழங்கப்பட்டது.

