ADDED : நவ 16, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், நவ. 16-
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட உதவி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். இணை செயலாளர் வெங்கடசுப்பிரமணியன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முயன்ற ஊழியர்கள் சங்க நிர்வாகிகளை, தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில், நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.