sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆன்லைன் ரம்மியில் இழப்பு வங்கி மேலாளர் தற்கொலை

/

ஆன்லைன் ரம்மியில் இழப்பு வங்கி மேலாளர் தற்கொலை

ஆன்லைன் ரம்மியில் இழப்பு வங்கி மேலாளர் தற்கொலை

ஆன்லைன் ரம்மியில் இழப்பு வங்கி மேலாளர் தற்கொலை


ADDED : ஏப் 02, 2025 02:44 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, பிடாரமங்கலம் அடுத்த தேவர்மலையை சேர்ந்தவர் ஜெயகுமார், 33; இவர், திருப்பூர் மாவட்டம், முத்துாரில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி கிளை உதவி மேலாளர்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான ஜெயகுமார், அதில், 10 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார். இதையடுத்து மனைவியிடம், 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த நெய்க்காரன்பட்டி அருகே கோவில்பட்டி அவரது தந்தை பிறந்த ஊர். நேற்று முன்தினம் அங்கு வந்தவர், மாலை, 3:00 மணிக்கு, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த முதியவர் தடுத்து, அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கிடையே, நேற்று மாலை, 3:00 மணிக்கு, தன், 'ஹோண்டா பேஷன் புரோ' டூ-வீலரில், நெய்க்காரன்பட்டி, பாண்டியன் நகர் ரயில்வே தண்டவாளத்திற்கு சென்ற ஜெயகுமார், சேலம் - மயிலாடுதுறை ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதில், அவரது உடல் இரண்டு துண்டானது.

சேலம் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றினர். மோகனுார் போலீசாரும் விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us