sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முகூர்த்த நாட்கள் வரிசை கட்டுவதால் செவ்வாழை பழம் ரூ.12க்கு விற்பனை

/

முகூர்த்த நாட்கள் வரிசை கட்டுவதால் செவ்வாழை பழம் ரூ.12க்கு விற்பனை

முகூர்த்த நாட்கள் வரிசை கட்டுவதால் செவ்வாழை பழம் ரூ.12க்கு விற்பனை

முகூர்த்த நாட்கள் வரிசை கட்டுவதால் செவ்வாழை பழம் ரூ.12க்கு விற்பனை


ADDED : மே 26, 2024 07:33 AM

Google News

ADDED : மே 26, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார் : ப.வேலுார் தாலுகா, பாண்டமங்கலம், பொத்தனுார், நன்செய் இடையாறு, குப்பிச்சிபாளையம், மோகனுார், ப.வேலுார், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், சிறுநல்லி கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். இதில், பூவன், பச்சைநாடன், கற்பூரவள்ளி, ரஸ்தாளி, மொந்தன், செவ்வாழை உள்ளிட்ட வகையான வாழைகளை பயிரிட்டு, தற்போது வாழைத்தார்களை வெட்டி வருகின்றனர்.

இவை, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்கப்படுகிறது. இங்கு ஏலம் எடுக்கப்படும் வாழைத்தார்கள், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த ஏலத்திற்கு, 600 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம், 350 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், 450 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 400 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்ற கற்பூரவள்ளி, 450 ரூபாய்க்கும், மொந்தன் காய், 5 ரூபாய்க்கு விற்றது, 10 ரூபாய்க்கும், செவ்வாழை, 5 ரூபாய்க்கு விற்றது, 12 ரூபாய்க்கும் விற்பனையானது.

வரத்து குறைவாலும், சுப முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வருவதாலும், வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us