ADDED : ஜன 31, 2026 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுார் நகர் முழுவதும், பிரதமர் நரேந்திர மோடி, பா.ம.க., அன்புமணி, அ.தி.மு.க., பொதுச்-செயலாளர் பழனிசாமி ஆகியோரை கேலி செய்யும் வகையில் ஒட்டி இருந்த போஸ்டர்-களை, பா.ஜ.,வினர் கிழித்தெறிந்தனர்.
தொடர்ந்து பாரத பிரதமரை விமர்சனம் செய்து போஸ்டர் ஒட்டிய நபர்களை கண்டித்து காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் கண்டன ஆர்ப்-பாட்டம் செய்தனர். அதன்பின், அப்பகுதி சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றி கிழித்-தெறிந்தனர். நிகழ்ச்சியில், பா.ஜ., பரமத்தி ஒன்றிய தலைவர் அருண், மாவட்ட துணை தலைவர் வடிவேல், மாவட்ட செயலாளர்கள் அன்னபூரணி, தனலட்-சுமி, ப.வேலுார் பா.ம.க., நகர செயலாளர் ஜெய்-கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

