sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோவிலுக்கு சென்றபோது பாழியில் விழுந்து சிறுவன் பலி

/

கோவிலுக்கு சென்றபோது பாழியில் விழுந்து சிறுவன் பலி

கோவிலுக்கு சென்றபோது பாழியில் விழுந்து சிறுவன் பலி

கோவிலுக்கு சென்றபோது பாழியில் விழுந்து சிறுவன் பலி


ADDED : ஆக 10, 2025 12:53 AM

Google News

ADDED : ஆக 10, 2025 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம் பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த சவுதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபதி; சலுான் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் விஷாந்த், 8; அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்தார்.

நேற்று மாலை, 5:00 மணிக்கு, பூபதி, தன் குடும்பத்தாருடன், ரங்கனுார் நால்ரோடு பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றார். கோவில் அருகே, 15 அடி ஆழத்தில் பாழி ஒன்று உள்ளது. இதில், தண்ணீர் எப்போதும் நிரம்பி காணப்படும். இந்நிலையில், இந்த பாழி அருகே விஷாந்த் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த பாழியில் விஷாந்த் தவறி விழுந்துவிட்டான். சிறுவனை காணாமல் பெற்றோர் தேடியுள்ளனர்

. அப்போது, 'சிறுவன் பாழி அருகே விளையாடிக்கொண்டிருந்ததாக' அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள், பாழியில் இறங்கி தேடினர். ஒரு மணி நேர தேடலுக்கு பின், விஷாந்த் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வெப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us