/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காலை உணவு திட்டம்; அமைச்சர் துவக்கி வைப்பு
/
காலை உணவு திட்டம்; அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 16, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: வெண்ணந்துார் யூனியனுக்குட்பட்ட தேங்கல்பாளையம் பகு-தியில் இயங்கி வரும் காந்தி கல்வி நிலைய உயர்நிலை பள்-ளியில், 'காலை உணவு திட்டம்' தொடக்க விழா, நேற்று நடந்தது.
இதில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், குழந்தைகளுடன் உணவு அருந்தினார். மேலும், மாணவ, மாணவியருக்கு பேனா, பென்சில்களை வழங்கினார். கலெக்டர் உமா, மாவட்ட ஊராட்-சிக்குழு உறுப்பினர் துரைசாமி, வெண்ணந்துார் ஊராட்சி ஒன்றி-யக்குழு உறுப்பினர் துரைசாமி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் காயத்ரி, ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.