sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பள்ளி முடிந்து வேனில் வந்த அண்ணனை பார்க்க ஓடி வந்த தம்பி சக்கரத்தில் சிக்கி பலி

/

பள்ளி முடிந்து வேனில் வந்த அண்ணனை பார்க்க ஓடி வந்த தம்பி சக்கரத்தில் சிக்கி பலி

பள்ளி முடிந்து வேனில் வந்த அண்ணனை பார்க்க ஓடி வந்த தம்பி சக்கரத்தில் சிக்கி பலி

பள்ளி முடிந்து வேனில் வந்த அண்ணனை பார்க்க ஓடி வந்த தம்பி சக்கரத்தில் சிக்கி பலி


ADDED : ஏப் 12, 2025 01:10 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி முடிந்து வேனில் வந்த அண்ணனை பார்க்க ஓடி வந்த தம்பி சக்கரத்தில் சிக்கி பலி'

ப.வேலுார், ப.வேலுார் அருகே, பள்ளி முடிந்து வேனில் வந்த அண்ணனை பார்ப்பதற்காக ஆர்வத்தில் ஓடிவந்த தம்பி, வேன் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே, கபிலர்மலை அண்ணா நகரை சேர்ந்தவர் ரமேஷ், 29; தனியார் மில் மேலாளர். இவரது மனைவி பிரியா, 25; தம்பதிக்கு அஸ்வின், 3, வெற்றிமிதுன், 2, என, இரண்டு ஆண் குழந்தைகள். இதில், அஸ்வின், நாமக்கல் கீரம்பூர் அருகே உள்ள தனியார் பள்ளியில், எல்.கே.ஜி., படிக்கிறார். நேற்று மாலை, 5:00 மணிக்கு பள்ளி வேனில் வீடு திரும்பினார். வீட்டின் முன் பள்ளி வேன் வந்து நின்றவுடன், அஸ்வின் இறங்கி வீட்டிற்குள் சென்றார்.

அப்போது, அண்ணன் அஸ்வினை பார்க்கும் ஆர்வத்தில் ஓடிவந்த தம்பி வெற்றிமிதுன், வேனின் முன்புறம் சென்றுள்ளார். இதை கவனிக்காத டிரைவர், வேனை இயக்கி புறப்பட்டார். அப்போது வேன் முன்புற சக்கரத்தில் சிக்கிய வெற்றிமிதுன் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் பிரியா, குழந்தை வெற்றிமிதுன் உடல் நசுங்கி, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை பார்த்து கதறி

அழுதார்.

ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, பள்ளி வேன் டிரைவர், ஜேடர்பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம், 45, என்பவரை கைது செய்தனர். மேலும், பள்ளி வேனையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us