/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நரிக்குறவர் காலனிக்கு பஸ் வசதி தேவை
/
நரிக்குறவர் காலனிக்கு பஸ் வசதி தேவை
ADDED : ஜூலை 04, 2025 01:19 AM
நாமக்கல், நாமக்கல் மாநகராட்சி, பெரியபட்டி நரிக்குறவர் காலனிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாநகராட்சி, 39 வது வார்டுக்கு உட்பட்ட கொண்டிச்செட்டிப்பட்டி மற்றும் பெரியப்பட்டி பகுதிகளில், 180-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. மேலும், பெரியப்பட்டி பகுதிக்கு இயக்கப்பட்ட மினி பஸ்சும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், 5 கி.மீ., தொலைவில் உள்ள நாமக்கல்லுக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதியில் போதுமான மின்விளக்கு வசதிகளும் இல்லை. பழங்குடியின மக்களாகிய தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். என, நரிக்குறவர் சமூகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.