sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சேலம், கோவை மண்டல சாரணியருக்கான முகாம்

/

சேலம், கோவை மண்டல சாரணியருக்கான முகாம்

சேலம், கோவை மண்டல சாரணியருக்கான முகாம்

சேலம், கோவை மண்டல சாரணியருக்கான முகாம்


ADDED : ஜூலை 25, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம் :ராசிபுரம் அடுத்த அணைப்பாளையத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லுாரியில், சேலம், கோவை மண்டல சாரணியர் சிறப்பு முகாம் நடந்தது.

கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது: சேலம் மற்றும் கோவை மண்டலத்தை சேர்ந்த கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய, 36 சாரண மாவட்டங்களில் இருந்து, 576 சாரண, சாரணியர்கள், 72 சாரண சாரணிய ஆசிரியர்கள், 36 மாவட்ட பொறுப்பாளர்கள் என மொத்தம், 684 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

சாரண இயக்கங்களில் சேரும் போது மாணவ, மாணவியருக்கு பல்வேறு தகவல் கிடைக்கப் பெறுவதோடு, சிறு வயதில் இருந்தே தன்னம்பிக்கையும் வளர்கிறது. மேலும் உங்களின் எதிர்காலமும் பிரகாசமாக அமையும்.இவ்வாறு பேசினார்.

முகாமில் அணி வகுப்பு, கிராமிய நடனம், உணவு திருவிழா, கயிற்றுக்கலை, சாகச பயணம், முகாம் கலை என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில், முதன்மை ஆணையர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் புருசோத்தமன், கோவை மண்டல உதவி ஆணையர் சீனிவாஸ், மகளிர் கல்லுாரி நிறுவன தலைவர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us