/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கார் மோதி விபத்து: கட்டட மேஸ்திரி பலி
/
கார் மோதி விபத்து: கட்டட மேஸ்திரி பலி
ADDED : ஏப் 13, 2025 04:12 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி அலெக்சாண்டர் மகன் விக்னேஷ், 22; கல்லுாரி மாணவர். இவர், இரு தினங்களுக்கு முன் காரில், சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அதேசமயம், கூனவேலம்பட்டியை சேர்ந்த கட்டட மேஸ்திரி வேல்முருகன், 39, டூவீலரில், ராசிபுரத்தில் இருந்து சென்று கொண்டிருந்தார். ரயில்வே மேம்பாலம் தாண்டி சென்றுகொண்டி-ருந்தபோது, வேல்முருகன் டூவீலர் மீது விக்னேஷ் ஓட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது.
படுகாயமடைந்த வேல்முருகனை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்து-வமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வேல்முருகன் பலி-யானார். ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.