sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலை பள்ளத்தில் பாய்ந்த கார்

/

கொல்லிமலை பள்ளத்தில் பாய்ந்த கார்

கொல்லிமலை பள்ளத்தில் பாய்ந்த கார்

கொல்லிமலை பள்ளத்தில் பாய்ந்த கார்


ADDED : ஜூன் 25, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம், கொல்லிமலையில், ஒருவார காலமாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் மலைப்பாதையில் உள்ள, 40வது கொண்டை ஊசி வளைவில் இருந்து, 70வது கொண்டை ஊசி வளைவு வரை கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் பகுதியை சேர்ந்த, இரண்டு குழந்தைகள் உட்பட, ஆறு பேர் ஒரு காரில் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனர். பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு கொண்டை ஊசி வளைவு பகுதியில் இறங்கிக்

கொண்டிருந்தனர்.

அப்போது, 48வது கொண்டை ஊசி வளைவில் இருந்த பள்ளத்தில் கார் பாய்ந்து, மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக, ஆறு பேரும் காயமின்றி உயிர் தப்பினர். பின், நடந்தபடி அடுத்த கொண்டை ஊசி வளைவிற்கு வந்து சேர்ந்துள்ளனர். நேற்று காலை, கிரேன் மூலம் பள்ளத்தில் பாய்ந்த காரை மீட்டனர்.






      Dinamalar
      Follow us