/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் அருகே கோர விபத்து சரக்கு வேன்கள் மோதி டிரைவர் பலி; 6 பேர் சீரியஸ்
/
ராசிபுரம் அருகே கோர விபத்து சரக்கு வேன்கள் மோதி டிரைவர் பலி; 6 பேர் சீரியஸ்
ராசிபுரம் அருகே கோர விபத்து சரக்கு வேன்கள் மோதி டிரைவர் பலி; 6 பேர் சீரியஸ்
ராசிபுரம் அருகே கோர விபத்து சரக்கு வேன்கள் மோதி டிரைவர் பலி; 6 பேர் சீரியஸ்
ADDED : செப் 29, 2024 03:37 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, நேற்று இரவு இரண்டு சரக்கு வேன்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஆறு பேர் கவலைக்கிட-மான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம், சுக்கம்பட்டியை சேர்ந்த காய்கறி வியாபா-ரிகள், நேற்று பேளுக்குறிச்சி சந்தைக்கு காய்கறி விற்பனைக்கு சென்றுள்ளனர். இரவு சந்தை முடிந்து, காய்கறிகளை, 'மகேந்-திரா' பிக்கப் வேனில் ஏற்றிக்கொண்டு, இரவு, 10:00 மணிய-ளவில் பேளுக்குறிச்சியில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வண்டியை சேசன்சாவடியை சேர்ந்த டிரைவர் தங்கம், 30, ஓட்டினார்.அப்போது, எதிரே, நெடுஞ்சாலை சிக்னல் விளக்குகளை பராம-ரிப்பவர்கள் சிலர், மற்றொரு பிக்கப் வேனில் வந்து கொண்டிருந்-தனர். போடிநாயக்கன்பட்டி அருகே சென்றபோது, இரண்டு வேன்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு வேன்களும் அப்பளம் போல் நொறுங்கியது. டிரைவர் தங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயம-டைந்த, சிங்களாந்தபுரத்தை சேர்ந்த வெங்கடாஜலம் மகன் ரமேஷ், அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் கண்ணன், 25, ஆறுமுகம் மகன் சதீஷ்குமார், 35, பூமாலை மகன் கிருஷ்ண-மூர்த்தி, 33, மோளப்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி மகன் முருகன், 45, பெரியசாமி, 40 உள்ளிட்ட, 6 பேர் படுகாயமடைந்-தனர்.
ஒருவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் சேலம் தனியார் மருத்துவமனையிலும், 3 பேர் சேலம் அரசு மருத்துவம-னையிலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரு-கின்றனர். இதுகுறித்து பேளுக்குறிச்சி போலீசார் விசாரித்து வரு-கின்றனர்.