/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மருமகளை தாக்கிய மாமியார் மீது வழக்கு
/
மருமகளை தாக்கிய மாமியார் மீது வழக்கு
ADDED : ஜூன் 21, 2025 01:12 AM
ப.வேலுார், ப.வேலுார் அருகே, வடக்கு நல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 40; இவரது மனைவி கவிப்பிரியா, 34; தம்பதியருக்கு, 3 வயதில் ஒரு மகன் உள்ளார். சில ஆண்டுகளாக, அமெரிக்காவில் வசித்து வந்தனர். அப்போது தம்பதியருக்குள் கருத்து வேறுபாடால், மனைவிக்கு தெரியாமல் அமெரிக்காவிலிருந்து சொந்த ஊரான ப.வேலுாருக்கு பிரபாகரன் வந்துள்ளார். சில நாட்களில், கவிப்பிரியாவும், ப.வேலுாருக்கு வந்து கணவருடன் வசித்து வந்தார்.
கடந்த, 15ல் மகனுக்கு பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்போது, மீண்டும் கணவன், மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மாமியார் ராசம்மாள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர்கள் தேவி, செந்தில் ஆகிய மூவரும் கவிப்பிரியாவை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், ப.வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார்படி, மாமியர் ராசம்மாள், உறவினர்கள் தேவி, செந்தில் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, ப.வேலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.