sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஐ.ஏ.எஸ்., எனக்கூறி திருமணம் வாலிபர், பெற்றோர் மீது வழக்கு

/

ஐ.ஏ.எஸ்., எனக்கூறி திருமணம் வாலிபர், பெற்றோர் மீது வழக்கு

ஐ.ஏ.எஸ்., எனக்கூறி திருமணம் வாலிபர், பெற்றோர் மீது வழக்கு

ஐ.ஏ.எஸ்., எனக்கூறி திருமணம் வாலிபர், பெற்றோர் மீது வழக்கு


ADDED : ஜன 13, 2024 01:48 AM

Google News

ADDED : ஜன 13, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், மோகனுாரை சேர்ந்தவர் அகல்யா, 27, எம்.பி.ஏ., பட்டதாரி. இவருக்கும், நாமக்கல் டவுன் ஏ.எஸ்.பேட்டை, முல்லை நகரை சேர்ந்த ராஜா, 35, என்பவருக்கும், 2021 பிப்., 24ல், பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்துக்கு முன், ராஜா தன்னை ஐ.ஏ.எஸ்., அதிகாரி என கூறியதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின், வேலைக்கு செல்லாமல் ராஜா வீட்டிலேயே இருந்தார்.

இதனால், சந்தேகமடைந்த அகல்யா, ராஜாவின் மொபைல் போனை ஆய்வு செய்தார். அப்போது தான், அவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி இல்லை என்பது தெரிந்தது. இதையடுத்து, கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது; அகல்யாவை ராஜாவின் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தி உள்ளனர். உயிருக்கு பயந்த அகல்யா, மோகனுாரில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். தொடர்ந்து, இது தொடர்பாக, மோகனுார் போலீசில், கடந்த, 8ல் புகாரளித்தார்.

அதன்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான ராஜா உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us