ADDED : மார் 11, 2025 07:06 AM
ப.வேலுார்: ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனுார், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதுார், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று, கிழங்கு ஆலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். ஆலையில், ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.
கடந்த வாரம், ஜவ்வரிசி ஆலைக்கு செல்லும் மரவள்ளி கிழங்கு டன், 6,000 ரூபாய்க்கு விற்றது. தற்போது, 300 ரூபாய் வரை குறைந்து, 5,700 ரூபாய்க்கு விற்கிறது. இதேபோல், சிப்ஸ் மரவள்ளி கிழங்கு டன், 7,500 ரூபாய்க்கு விற்றது, 1,000 ரூபாய் வரை குறைந்து, 6,500 ரூபாய்க்கு விற்றது. விலை சரிவால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.