ADDED : மார் 20, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம்
அருகே, புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மாபெரும்
மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு புதுச்சத்திரம்,
ராசிபுரம், பெரியமணலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள்
தாங்கள் வளர்க்கும் பசு, எருமை மாடுகளை விற்பனைக்கு கொண்டு
வருகின்றனர்.
இதேபோல், இறைச்சிக்காக கேரளாவில் இருந்து மாடுகள்
வாங்க ஏராளமான வியாபாரிகள் வருகின்றனர். நேற்று நடந்த
மாட்டுச்சந்தைக்கு, பசு மாடுகள் வரத்து அதிகரித்தும், எருமை மாடுகள்
வரத்து குறைந்தும் காணப்பட்டது. இதனால், கடந்த வாரம், 2.50 கோடி
ரூபாய்க்கு நடந்த வர்த்தகம், இந்த வாரம், 2 கோடி ரூபாய்க்கு
விற்பனையானது.

