sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வருவாய் அலுவலர் மீது சேர்மன் குற்றச்சாட்டு

/

வருவாய் அலுவலர் மீது சேர்மன் குற்றச்சாட்டு

வருவாய் அலுவலர் மீது சேர்மன் குற்றச்சாட்டு

வருவாய் அலுவலர் மீது சேர்மன் குற்றச்சாட்டு


ADDED : ஆக 27, 2025 01:28 AM

Google News

ADDED : ஆக 27, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ராசிபுரம் நகராட்சி நகர்மன்ற கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் கவிதா தலைமை வகித்தார். கமிஷனர் கோபிநாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு தங்களது வார்டு பிரச்னைகளை கூறினர். பல கவுன்சிலர்கள் தங்களது தெருக்களில் நாய் தொல்லை அதிகம் உள்ளது. அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதுமட்டுமின்றி சாக்கடை பிரச்னை, முட்புதர்களை அகற்ற வேண்டும். தெரு விளக்கு அமைத்தல், ரேஷன் கடை அமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அதை தொடர்ந்து, சேர்மன் கவிதா பேசுகையில், ''ராசிபுரம் நகராட்சிக்கு போதுமான வருவாய் வருவதில்லை. முக்கியமாக வருவாய் அலுவலர் சீனிவாசன் சரியாக பணியாற்றுவதில்லை. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது,'' என, குற்றம் சாட்டினார். இதை கேட்ட கவுன்சிலர்கள், வருவாய் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us