/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர் திருவிழா கோலாகலம்
/
புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர் திருவிழா கோலாகலம்
புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர் திருவிழா கோலாகலம்
புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர் திருவிழா கோலாகலம்
ADDED : மே 30, 2024 06:59 AM
மோகனுார் : மோகனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட புதுத்தெருவில், புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் தேர் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம், இந்தாண்டு விழா, கடந்த, 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பங்கு தந்தை ஜான்போஸ்கோ பால் தலைமையில் நவநாள் திருப்பலி நடந்தது. 27ல் நவநாள் ஜெபம், நவநாள் திருப்பலி மற்றும் தேர் பவனி நடந்தது.
நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, நாமக்கல் ஆர்.சி.சமூக சேவை மைய இயக்குனர் அருட்தந்தை பிரஷனா தலைமையில், திருவிழா திருப்பலி, மதியம், 1:00 மணிக்கு அன்பின் விருந்து, மாலை, 5:00 மணிக்கு பொங்கல் மந்திரிப்பு நடந்தது. தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் எழுந்தருளிய புனிதர் பஸ் ஸ்டாண்ட், நாமக்கல் சாலை, கடை வீதி, வளையப்பட்டி சாலை உள்பட நகரின் முக்கிய வீதிகளில் பவனி வந்து, பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினார்.வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும், புனிதரை வணங்கினர். நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, பங்கு தந்தை, பங்கு மக்கள் செய்திருந்தனர்.