sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா

/

செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா

செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா

செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா


ADDED : மே 09, 2024 06:34 AM

Google News

ADDED : மே 09, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார் : மோகனுார் அடுத்த எஸ்.வாழவந்தியில், பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 2ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு தினமும் பல்வேறு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று மதியம், 2:00 மணிக்கு, சுவாமி தேரில் ரதம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து, எஸ்.வாழவந்தி பகுதியில் மாவிளக்கு பூஜையும், எல்லை உடைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. உயிருடன் உள்ள செம்மறி ஆட்டின் ஈரல் எடுத்து சுவாமி மடியில் வைத்து பூஜை செய்து பூசாரி வாயில் வைத்து ஊமை புலி குத்தும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.இதையடுத்து, சின்னகரசபாளையம், பெரியகரசப்பாளையம், கே.ராசாம்பாளையம், காளிபாளையம், பெரமாண்டம்பாளையம், முத்துார், ஆண்டிபாளையம், வடக்கு தீர்த்தாம்பாளையம், மோளக்கவுண்டனுார், குட்லாம்பாறை, கே.அய்யம்பாளையம், நொச்சிப்பட்டி, கே.புதுப்பாளையம் அக்கரையாம்பாளையம், புளியம்பட்டி, வள்ளியப்பம்பட்டி, வள்ளியப்பம்பட்டிபுதுார் என, 18 ஊர்களிலும், தினமும் இரவு, 7:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறையினர், கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us