sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாட்டுக்கோழி விலை உயர்வு: அசைவ பிரியர் அதிர்ச்சி

/

நாட்டுக்கோழி விலை உயர்வு: அசைவ பிரியர் அதிர்ச்சி

நாட்டுக்கோழி விலை உயர்வு: அசைவ பிரியர் அதிர்ச்சி

நாட்டுக்கோழி விலை உயர்வு: அசைவ பிரியர் அதிர்ச்சி


ADDED : ஏப் 07, 2025 01:54 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுாரில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சுல்தான் பேட்-டையில் நாட்டுக்கோழி வாரச்சந்தை கூடுவது வழக்கம்.

நேற்று கூடிய நாட்டுக்கோழி வாரச்சந்தையில், பரமத்தி, ப.வேலுார், மோகனுார், நாமக்கல், திருச்செங்கோடு, கந்தம்-பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாட்டுக்

கோழிகளை வியாபாரிகளும், விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

தற்போது, சுற்று வட்டார பகுதிகளான நன்செய்இடையாறு அக்னி மாரியம்மன், ப.வேலுார் மகா மாரியம்மன் கோவில் திரு-விழா நிறைவடைந்தது.

இதனால், வீட்டில் அசைவம் சமைக்க தொடங்கியுள்ளனர். அதனால், நேற்று நாட்டுக்கோழி வாரச்சந்தையில் கணிசமாக விலை உயர்ந்தது. ப.வேலுார் பகுதி முழுவதும் விவசாயிகள், தொழிலாளர் நிறைந்த பகுதியாகும். ஞாயிறு விடுமுறை என்-பதால், மட்டன், சிக்கன் அதிகளவு விற்பனையாகும். குறிப்பாக, அனைத்து கோழி கடைகளிலும் கூட்டம் அதிகளவு இருக்கும்.

இதில், நாட்டுக்கோழி விற்பனை முக்கிய இடம் பிடிக்கும். கடந்த வாரம் நாட்டுக்கோழி ஒருகிலோ, 500 ரூபாய்க்கு விற்றது. தற்போது, கிலோவுக்கு, 150 ரூபாய்

கூடுதலாகி, 650 ரூபாய்க்கு விற்றதால், அசைவ பிரியர்கள் அதிர்ச்-சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us