sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

6 அடி நீள பாம்புடன் விளையாடிய குழந்தை

/

6 அடி நீள பாம்புடன் விளையாடிய குழந்தை

6 அடி நீள பாம்புடன் விளையாடிய குழந்தை

6 அடி நீள பாம்புடன் விளையாடிய குழந்தை


ADDED : ஆக 03, 2025 12:48 AM

Google News

ADDED : ஆக 03, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், விபரம் தெரியாத குழந்தைகளுக்கு பாம்பும் விளையாட்டு பொருள்தான் என்பதை, ராசிபுரம் அருகே ஒரு சம்பவம் உணர்த்தியுள்ளது.

ராசிபுரம், கோனேரிப்பட்டி எக்ஸ்டென்ஷன் பகுதியில் குடியிருந்து வரும் முன்னாள் கவுன்சிலர் ராம்குமார் வீட்டின் வெளியில், 6 அடி நீள சாரைப்பாம்பு சென்றுள்ளது.

காயமடைந்த அந்த பாம்பால் வேகமாக நகர முடியவில்லை. இதை பார்த்த பெரியவர்கள் பதறியடித்து ஓடினர். ஆனால், அதே பகுதியை சேர்ந்த ஜனகன் மகன், 3 வயது குழந்தை அகிலன், பாம்பை கையில் பிடித்து விளையாட தொடங்கினான். தப்பி ஓட முயன்ற பாம்பு வாலை பிடித்து தரதரவென்று வீதியில் இழுத்து சென்றான்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த ராம்குமார், பாம்பை சிறுவனிடம் இருந்து மீட்டு அருகில் இருந்த கோனேரிப்பட்டி ஏரியில் விட்டு வந்தார். சிறுவன் பாம்பை பிடித்து விளையாடிய வீடியோ ராசிபுரத்தில் வைரலாகி வருகிறது.






      Dinamalar
      Follow us