sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்

/

கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்

கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்

கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்


ADDED : டிச 26, 2024 01:21 AM

Google News

ADDED : டிச 26, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், டிச. 26-

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலயம் மற்றும் அசெம்பிளி ஆப் காட் சபையில் சிறப்பு பிரார்த்தனையுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, 8:30 மணிக்கு பங்குதந்தை தாமஸ் மாணிக்கம் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிறிஸ்து அரசர் ஆலய பங்குத்தந்தை மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

அதேபோல், நாமக்கல் - சேலம் சாலையில் அமைந்துள்ள அசெம்பிளி ஆப் காட் சபையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. அதில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, தலைமை போதகர் நாதன் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையுடன் துவங்கியது. தொடர்ந்து ஏசு பிறப்பு குறித்து சிறுவர், சிறுமியர் நாடகம் நடத்தப்பட்டது. காலை, 8:30 மணிவரை நடந்த சிறப்பு ஆராதனையில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us