ADDED : அக் 13, 2024 08:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: 'சாம்சங்' தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாமக்கல் பூங்கா சாலையில், சி.ஐ.டி.யு., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அசோகன் தலைமை வைத்தார்.
அதில், சாம்சங் தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வைத்து போராட்டம்
நடத்தி வருகிறனர். தொழிற்சங்கம் அமைக்க உரிமை வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபடும்
தொழிலாளர்களை கைது செய்வது, சிறையில் அடைப்பது போன்ற செயல்களை கண்டித்தும் கோஷம்
எழுப்பினர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி, துணைத்தலைவர் ஜெயராமன், துணை செயலாளர்கள்
சிவராஜ், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.