ADDED : பிப் 25, 2026 06:40 AM

திருச்செங்கோடு: மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு., சார்பில் உயர்த்தப்பட்ட எப்.சி., இன்சூரன்ஸ் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட துணை செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆனந்தன், எலச்சிபாளையம் தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், 15 ஆண்டு கால வாகனங்கள் கண்டம் செய்தால், அரசே வங்கி மூலம் புதிய வாகனம் வழங்க வேண்டும். ஆன்லைன் அபராதத்தை தடுத்து நிறுத்த வேண்டும். எப்.சி.,க்கு வாகனம் செல்லும்போது ஸ்டிக்கர் என்ற பெயரால் பணம் பறிக்காதே, சுங்கச்சாவடி கொள்ளைக்கு முடிவுகட்டு, பெட்ரோல், டீசல், காஸ் விலையை கட்டுப்படுத்து, புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழகத்தில் அமுல்படுத்தாதே என, வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மாவட்ட செயலாளர் வேலுசாமி, தலைவர் அசோகன், சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

