/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பத்தாம் வகுப்பு தேர்வு: 283 பேர் 'ஆப்சென்ட்'
/
பத்தாம் வகுப்பு தேர்வு: 283 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 29, 2025 07:19 AM
நாமக்கல்: தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. இதற்காக, மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி என, மொத்தம், 92 தேர்வு மையங்கள் ஏற்-படுத்தப்பட்டிருந்தன.
முதன்மை கண்காணிப்பாளர், 94 பேர், கூடுதல் முதன்மை கண்-காணிப்பாளர், 2 பேர், கூடுதல் துறை அலுவலர்கள், 2 பேர், பறக்-கும்படை உறுப்பினர்கள், 170 பேர், வழித்தட அலுவலர்கள், 24 பேர், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 3 பேர், அறை கண்காணிப்பாளர்கள், 1,690 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
எலச்சிப்பாளையம் தனியார் மெட்ரிக் பள்ளியில் நடந்த தேர்வை, நாமக்கல் கலெக்டர் உமா ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்-றனர். நேற்று நடந்த தேர்வில், மாவட்டம் முழுவதும், 18,938 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 283 தேர்வர்கள் கலந்துகொள்-ளவில்லை.