ADDED : செப் 20, 2024 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அதன் அலுவலகத்தில் துாய்மை முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, கொடிய-சைத்து தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட பேரணி, சேலம் கிழக்கு ரயில்வே காலனி சாலை வழியே ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனை அடைந்தது. அங்கிருந்த பயணியரிடம் ரயில்வே வளாகம், ரயில்களில் துாய்மையின் தரத்தை பராமரிப்-பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் உள்ளிட்டஅலுவலர்கள் பங்கேற்றனர்.