sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பூட்டி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

/

பூட்டி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

பூட்டி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

பூட்டி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்


ADDED : ஜூலை 09, 2024 05:55 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அடுத்த அளவாய்பட்டி கிராமத்தில், 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

குடிநீர், உப்பு நீராக மாறியதால், மக்களின் கோரிக்கையை ஏற்று அளவாய்பட்டி கிராமத்தில், கடந்த, 2 ஆண்டுக்கு முன் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது. சுத்திகரிப்பு நிலையம் திறந்து, இரண்டு ஆண்டுக்கு மேலாகியும், மூடியே கிடப்பதாகவும், இதனால் அடிப்படை வசதியான குடிநீரின்றி தவிப்பதாகவும் ஊர்மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், நேர காலமின்றி இரண்டு, மூன்று தினங்கள் காவிரி நீர் வினியோகம் செய்தாலும், குடிநீருக்காக, 2 கிலோ மீட்டர் நடந்து செல்லும் நிலை இருப்பதாக கூறுகின்றனர். இதனால் வயதானவர்கள் குடிநீர் எடுக்க முடியாமல் சிரமப்படுவதாகவும், உடனடியாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அளவாய்பட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us